Politics
மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "பாஜக ரவுடிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆதரவாகவே தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் நேர்மையாகவும், நியாமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
ஒருநாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் ஏன் இரவு 10 மணியை தேர்வு செய்தது. மோடி இன்று மாலை மதுராபூர், டம் டம் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு. 23 ஆம் தேதியோடு மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !
-
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !
-
மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !
-
காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !
-
”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!