Politics
மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "பாஜக ரவுடிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆதரவாகவே தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் நேர்மையாகவும், நியாமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
ஒருநாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் ஏன் இரவு 10 மணியை தேர்வு செய்தது. மோடி இன்று மாலை மதுராபூர், டம் டம் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு. 23 ஆம் தேதியோடு மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!