Politics
மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "பாஜக ரவுடிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆதரவாகவே தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் நேர்மையாகவும், நியாமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
ஒருநாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் ஏன் இரவு 10 மணியை தேர்வு செய்தது. மோடி இன்று மாலை மதுராபூர், டம் டம் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு. 23 ஆம் தேதியோடு மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
”விஜயின் தராதரம் அவ்வளவுதான்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியம் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்ன மகிழ்ச்சி செய்தி என்ன?
-
”சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அடக்குமுறையின் உச்சம் - பா.ஜ.கவின் சர்வாதிகார சட்டத்திற்கு முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!