Politics
மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "பாஜக ரவுடிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆதரவாகவே தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் நேர்மையாகவும், நியாமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
ஒருநாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் ஏன் இரவு 10 மணியை தேர்வு செய்தது. மோடி இன்று மாலை மதுராபூர், டம் டம் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு. 23 ஆம் தேதியோடு மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!