Politics
மோடிக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதாக நினைக்கிறார்? ராஜஸ்தான் முதல்வர் சாடல்...
மக்களவைத் தேர்தலில், ஜோத்பூரில் வாக்கைப் பதிவு செய்த அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உலக வரலாற்றில் ஒவ்வொரு சர்வாதிகாரியும் முதலில் தேசியவாதம் பேசிமக்களிடத்தில் தங்கள் பிம்பத்தைப் பெற்றனர். இப்போது அப்படியொரு பிம்பத்தைப் பெறுவதற்குத்தான் மோடி முயற்சி செய்கிறார். இதை மக்கள் புரிந்துகொண்ட செயல்படவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மோடியும் ஒரு சர்வாதிகாரியாக மாற வாய்ப்புள்ளது. சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எப்போதும் ஆபத்தையே உருவாக்கும்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக 5 ஆண்டு ஆட்சி செய்தது குறித்துப் பேசாமல் தேசியவாதம் பற்றியும் தேசப்பற்று பற்றியும் மோடி பேசிவருகிறார். இப்படிப் பேசுவதன் மூலம் அவருக்கு மட்டும்தான் தேசப்பற்று உள்ளதா ஏன் மற்றவர்களுக்குத் தேசப்பற்று கிடையாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் பிரதமர் இப்படிப் பேசுவதன் மூலம் நாட்டையே பிளவுபடுத்த முயல்கிறார். என்று கெலாட் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!