Politics

கலைஞர் பிறந்தநாளில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: வி.பி.துரைசாமி உறுதி!

இது குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வி.பி.துரைசாமி; வரும் ஜூன் 3 தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், எப்போதெல்லாம் இந்த அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவருகிறார் என்று தெரிந்தால் அப்போது தமிழக சபாநாயகர் தவணை முறையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்துவருகிறார். இதுபோன்ற செயலை இந்திய ஜனநாயகம் இதுவரைக் கண்டதில்லை. இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுக்கு ஒரு உளவுப் பிரிவைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல முடிவு எடுத்து வருகிறார்கள் என அவர் விமர்சித்தர்.