Politics
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது - காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத்
பெங்களூரில் இருந்து புதுச்சேரி நிகழ்வுகளில் பங்கேற்க காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் இன்று புதுச்சேரி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்த தேர்தலில் காங் கூட்டனி அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. புதுச்சேரி, தமிழகத்திலும் 40க்கு 40 திமுக, காங் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு வங்கி கணக்குக்கு 15 லட்ச ருபாய் பணம் செலுத்துவதாகி பொய் வாக்குறுதி கூறி நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது பாஜக அரசு,
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது, அம்பானி, அடானி போன்ற சில பண முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்காக, குறிப்பாக ஏனழ மக்களுக்காக பாஜக அரசு செயல்படவில்லை. பாஜக ஆட்சியில் 1000க்கனக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதுதான் மோடியின் சாதனை. இன்று நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதற்கு காரணமே மோடியின் மோசமான ஆட்சிதான் என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!