Politics
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது - காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத்
பெங்களூரில் இருந்து புதுச்சேரி நிகழ்வுகளில் பங்கேற்க காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் இன்று புதுச்சேரி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்த தேர்தலில் காங் கூட்டனி அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. புதுச்சேரி, தமிழகத்திலும் 40க்கு 40 திமுக, காங் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு வங்கி கணக்குக்கு 15 லட்ச ருபாய் பணம் செலுத்துவதாகி பொய் வாக்குறுதி கூறி நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது பாஜக அரசு,
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது, அம்பானி, அடானி போன்ற சில பண முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்காக, குறிப்பாக ஏனழ மக்களுக்காக பாஜக அரசு செயல்படவில்லை. பாஜக ஆட்சியில் 1000க்கனக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதுதான் மோடியின் சாதனை. இன்று நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதற்கு காரணமே மோடியின் மோசமான ஆட்சிதான் என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!