murasoli thalayangam
இந்திய மாநிலங்களுக்கொல்லாம் வழி காட்டும் கேரள மாநிலம்! - முரசொலி தலையங்கம்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் கடந்த 20 நாட்களாக தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுவரை குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மற்ற பதிவேடுகளுக்கு இந்திய மாநிலங்களின் 11 முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மற்ற மாநிலங்களூக்கு வழிகாட்டும் முன்னோடியாக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆளும்கட்சி - எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றி இருக்கிறது.
இப்போது நாட்டில் நிலவும் கலவரமான - நெருக்கடியான சூழ்நிலையில், மத்திய அரசின் இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதில் முதல் மாநிலம் என்பதும், இந்திய ஜனநாயக சரித்திரத்தில் தனிச் சிறப்பான பதிவாக இடம் பெற்றிருக்கிறது. அழைன் சிரிப்பாம் கேரள மாநிலம், இந்திய மாநிலங்களுக்கொல்லாம் வழி காட்டும் ஒளி விளக்காகி இருகிறது.
அதனால் தான் தமிழக மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திடும் வகையில் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள மாதிரியைப் பின்பற்றி தீர்மானம் நிறைவேற்றுக என்று தனி நபர் தீர்மானம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?