murasoli thalayangam
இதையா காந்தியின் கனவு என்கிறார் மோடி? - முரசொலி தலையங்கம்!
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது மோடியின் திட்டம் அல்ல; குடியுரிமை சட்டம் காந்தியின் கனவுத் திட்டம். மகாத்மாவின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கயர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது அவர்கள் வரவேற்கப் படுவார்கள் என்று காந்திஜி கூறியிருந்தார் என்று பேசியிருக்கிறார்.
காந்தி சொன்னதை அரைகுறையாகப் படித்திருக்கிறார் மோடி. அது ஒரு கலவரக் காலம். இங்கும் அங்கும் கொலைகள் நடந்தது, அதனால் அப்போது இங்கிருந்த இஸ்லாமியர்களையோ, அங்கிருந்து இந்துக்களையோ விரட்டக்கூடாது என்று காந்தி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி சொன்னதை சொல்லும் பிரதமர் மோடி, காந்தியின் அடுத்த நிபந்தனையை மறந்துவிட்டார், அல்லது மறைத்துவிட்டார்.
காந்தி சொன்னது, “இந்திய யூனியனிலிருந்து வெளியேறும்படி ஒரு முஸ்லிம் மக்களைக்கூட வற்புறுத்தக்கூடாது” என்பதாகும். அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த படேலுக்கு இதுதொடர்பாக காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இந்த வாசகம் இருக்கிறது. இந்தக் கோப்புகளை பிரதமர் பார்க்கலாம். குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் காந்தியத்துக்கு எதிரானது என முரசொலி தெரிவித்துள்ளது.
Also Read
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!