murasoli thalayangam

இந்தியாவை ‘இந்து’ ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க!- முரசொலி தலையங்கம்

வளர்ந்து வரும் மத வன்முறைகள், தாக்குதல்கள் எதுவும் இனி நடக்காமல் இருக்க அறிஞர்கள், திரைத்துறையினர், வரலாற்று ஆசிரியர்கள் என 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்திற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் காலம் கடத்திய மோடி அரசு, வேறு எந்த புகார்களைப் பற்றியும் கவலை கொண்டதில்லை. தேர்தல் முறையினால் அதிகாரத்தை பிடித்த பா.ஜ.க-வின் கவனம் முழுவதும் ‘இந்து’ ராஷ்டிரம் மீதுதான் இருக்கிறது என முரசொலி கூறியுள்ளது.