M K Stalin
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை ‘லோக் பவன்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்திய கூட்டாட்சியில் ஆளுநர்கள் என்ற பொறுப்பே கேள்விக்குள்ளாகி வரும் சூழலில், மாநில அரசுகளின் நிதியால் இயங்கும் ஆளுநர் மாளிகைகளுக்கு ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் பண்பாட்டையும் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும் விமர்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றோரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத ஒன்றிய அரசு, தற்போது பெயர் மாற்ற உத்தரவிற்கு மட்டும் முன்வந்துள்ளது.
இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,
“பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!”
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!