M K Stalin
புயல், மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய மு.க.ஸ்டாலின்!
திருவாரூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால், ஆறுகள் மற்றும் குளங்கள் முழுவதும் நிரம்பியதால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று இரவு திருவாரூர் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொரக்குடி மற்றும் பண்ணைவிளாகம் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே காவனூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்து திருமதிகுன்னம், கண்கொடுதவனிதம், தாழைக்குடி, எருக்காட்டூர், கமலாபுரம், கீழமணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் இறுதியாக கச்சனம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சென்றார்.
இந்த நிகழ்வின் போது தி.மு.கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமாண பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, ஆடலரசன், மதிவாணன் உட்பட ஒன்றிய நகர செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!