M K Stalin
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: இதிலாவது உறுதியாக இருங்கள் - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
குலக்கல்வியை கொண்டு வரும் நோக்கில், புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க. அரசு. அதற்கு துளியளவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆமோதிக்கும் வகையிலேயே செயல்பட்டு வரும் எடப்பாடியின் அ.தி.மு.க அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மக்களும் தொடர்ந்து கண்டனங்களும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
புதியக் கல்விக் கொள்கைக்கான முன்னோட்டமாக 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளான பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என டெல்லியில் வந்த உத்தரவை அரசியல் ஆதாயத்திற்காக தலையை அசைத்து அதனை அமல்படுத்தும் நோக்கில் இருந்தது அ.தி.மு.க அரசு.
இந்த பொதுத்தேர்வு உத்தரவுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அ.தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 5,8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசாணை பிறப்பித்தனர்.”
“தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அ.தி.மு.க அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து - மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?