M K Stalin
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய செட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும்,அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?