M K Stalin
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய செட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும்,அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!