M K Stalin
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய செட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும்,அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!