M K Stalin
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய செட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும்,அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!