M K Stalin
வேலூரில் தீவிர பரப்புரையை தொடங்கினார் தலைவர் மு.க.ஸ்டாலின்..
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
ஆகையால், கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூரில் இரண்டு கட்டங்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். பரப்புரை மேற்கொள்வார் என தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று காலை வேலூரில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், உழவர் சந்தைப் பகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்துடன் நடைபயணமாகச் சென்று வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். மேலும், பலர் திரண்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
வாக்கு சேகரிப்பின் போது, கழக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கழக மாவட்டச் செயலாளர் நந்தக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செக்கமேடு, ஆலங்காயம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலப்பாடி, அல்லாப்புரம், துரைப்பாடி உள்ளிட்ட 11 பகுதிகளில் நாளை மறுநாள் வாக்கு சேகரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1ம் தேதி ஆம்பூர், இரண்டாம் தேதி குடியாத்தம், மூன்றாம் தேதி வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!