M K Stalin
“நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டு சேர்ந்ததுதான் அதிமுக கூட்டணி” - மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்தும், திருப்போரூர் இடைத்தேர்தல் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்தும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது மக்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று பொய் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்ற மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு வணிகள், தொழில் முனைவோர், விவசாயிகள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
2014 தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத பாஜகவின் மத்திய அரசு அம்பானி போன்றவர்களை மட்டுமே வாழ வைத்தது.
சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. தற்போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் சீட்டுக்காக மட்டுமில்லாமல் நோட்டுக்காகவும் கூட்டு வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் சாடினார்.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!