M K Stalin
“நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டு சேர்ந்ததுதான் அதிமுக கூட்டணி” - மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்தும், திருப்போரூர் இடைத்தேர்தல் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்தும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது மக்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று பொய் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்ற மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு வணிகள், தொழில் முனைவோர், விவசாயிகள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
2014 தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத பாஜகவின் மத்திய அரசு அம்பானி போன்றவர்களை மட்டுமே வாழ வைத்தது.
சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. தற்போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் சீட்டுக்காக மட்டுமில்லாமல் நோட்டுக்காகவும் கூட்டு வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் சாடினார்.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!