India
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் தலைமையில் இருக்கும் நிதிஷ்குமார் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்தியா கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
20 ஆண்டுகளாக வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் தவித்து வரும் பீகார் மக்களை மீட்க குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் 20 ஆண்டுகளாக பீகார் மக்களை வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் அதிகாரத்தில் இருக்க எந்த உரிமையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”பீகாரில் 9 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் ஒருபோதும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவரால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. இளைஞர்களுக்கான வேலையை உறுதி செய்யவில்லை. 20 ஆண்டுகளில் இவற்றை எல்லாம் செய்ய முடியாத நிதிஷ்குமார் அதிகாரத்தில் இருக்க எந்த உரிமையும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!