India
தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க திட்டம் - சமரசத் தேர்வு திட்டத்தை அறிவித்த உச்சநீதிமன்றம் !
நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் கீழ் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை தேங்கி கிடக்கின்றன. இந்த எண்ணிக்கையை குறைக்க ஏதுவாக ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதம் நாடு முழுவதும் சமரசத் தேர்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆலோசனையின் படி தேசிய சட்ட சேவை ஆணைய தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தாலுகா நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், செக்கு மோசடி வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், கடன், நிலம் கையகப்படுத்துதல், வணிக வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இந்த திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எந்தெந்த வழக்குகள் இந்த சமரசத் தீர்வு திட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை கண்டறிந்து பட்டியலிட வேண்டும். சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அறிவிக்க வேண்டும். பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமரச தீர்வு முலம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!