India
தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடகாவில் சிவப்பு நிற எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்குத்தொடர்ச்சி மழை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதோடு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது .
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தின் சில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அப்போது மணிக்கு 30-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஓரளவு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா ஆகிய இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அப்போது மணிக்கு 30-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா & மாஹே, கர்நாடகா ஆகிய இடங்களில் இன்று முதல் 25 ஆம் தேதிகளிலும், ராயலசீமா, இன்றும் நளையும், கடலோர ஆந்திரா & ஏனாம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!