India
பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு : தெற்கு ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு - என்ன காரணம்?
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பத்தியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 AC வகுப்பில் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவர் பயணம் செய்த ரயில் பெட்டியின் கழிவறை மிகவும் மோசமாக இருந்துள்ளது. மேலும் தண்ணீர் வசதிகூட இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர் ரயில் துவ்வாடா ரயில் நிலையத்தில் நின்றபோது அங்கிருந்த ரயில்வே அதிகாரியிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் அவர்களும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!