India
பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு : தெற்கு ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு - என்ன காரணம்?
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பத்தியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 AC வகுப்பில் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவர் பயணம் செய்த ரயில் பெட்டியின் கழிவறை மிகவும் மோசமாக இருந்துள்ளது. மேலும் தண்ணீர் வசதிகூட இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர் ரயில் துவ்வாடா ரயில் நிலையத்தில் நின்றபோது அங்கிருந்த ரயில்வே அதிகாரியிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் அவர்களும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!