India
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!
இந்தியா - சீனா எல்லை என்றாலே, பதற்றம் நிகழும் பகுதி என்று நினைவிற்கு வரும் அளவிற்கு, கடந்த 4 ஆண்டுகால நிகழ்வுகள் அமைந்து வந்தன.
இந்நிலையில், அப்பதற்றம் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் வழி, சற்று குறைந்து, சில அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தீபஒளித் திருநாளில் இரு நாடுகளிடையே அமைதி நிலைகொண்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டின் இராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாற்றிக்கொண்டனர்.
இச்செய்தி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு, பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வொற்றுமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Also Read
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!