India
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!
இந்தியா - சீனா எல்லை என்றாலே, பதற்றம் நிகழும் பகுதி என்று நினைவிற்கு வரும் அளவிற்கு, கடந்த 4 ஆண்டுகால நிகழ்வுகள் அமைந்து வந்தன.
இந்நிலையில், அப்பதற்றம் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் வழி, சற்று குறைந்து, சில அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தீபஒளித் திருநாளில் இரு நாடுகளிடையே அமைதி நிலைகொண்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டின் இராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாற்றிக்கொண்டனர்.
இச்செய்தி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு, பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வொற்றுமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!