India
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!
இந்தியா - சீனா எல்லை என்றாலே, பதற்றம் நிகழும் பகுதி என்று நினைவிற்கு வரும் அளவிற்கு, கடந்த 4 ஆண்டுகால நிகழ்வுகள் அமைந்து வந்தன.
இந்நிலையில், அப்பதற்றம் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் வழி, சற்று குறைந்து, சில அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தீபஒளித் திருநாளில் இரு நாடுகளிடையே அமைதி நிலைகொண்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டின் இராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாற்றிக்கொண்டனர்.
இச்செய்தி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு, பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வொற்றுமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!