India
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!
இந்தியா - சீனா எல்லை என்றாலே, பதற்றம் நிகழும் பகுதி என்று நினைவிற்கு வரும் அளவிற்கு, கடந்த 4 ஆண்டுகால நிகழ்வுகள் அமைந்து வந்தன.
இந்நிலையில், அப்பதற்றம் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் வழி, சற்று குறைந்து, சில அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தீபஒளித் திருநாளில் இரு நாடுகளிடையே அமைதி நிலைகொண்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டின் இராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாற்றிக்கொண்டனர்.
இச்செய்தி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு, பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வொற்றுமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !