India
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுக்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, காற்று மாசுவால் தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில், பட்டாசு வெடிப்பு அரங்கேறினால், மக்கள் கடுமையாக பாதிக்க நேரிடும் என பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, “ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது” என்றும், “பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி அரசும், பட்டாசு விற்பனைக்கான தடையை அறிவித்தது. இதன் வழி, டெல்லியின் காற்று மாசு நிலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு குறைந்துள்ளது.
Also Read
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !