India
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுக்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, காற்று மாசுவால் தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில், பட்டாசு வெடிப்பு அரங்கேறினால், மக்கள் கடுமையாக பாதிக்க நேரிடும் என பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, “ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது” என்றும், “பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி அரசும், பட்டாசு விற்பனைக்கான தடையை அறிவித்தது. இதன் வழி, டெல்லியின் காற்று மாசு நிலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு குறைந்துள்ளது.
Also Read
-
“இந்த மசோதாவால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும்” - பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!