India
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுக்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, காற்று மாசுவால் தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில், பட்டாசு வெடிப்பு அரங்கேறினால், மக்கள் கடுமையாக பாதிக்க நேரிடும் என பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, “ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது” என்றும், “பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி அரசும், பட்டாசு விற்பனைக்கான தடையை அறிவித்தது. இதன் வழி, டெல்லியின் காற்று மாசு நிலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு குறைந்துள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!