India
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுக்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, காற்று மாசுவால் தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில், பட்டாசு வெடிப்பு அரங்கேறினால், மக்கள் கடுமையாக பாதிக்க நேரிடும் என பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, “ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது” என்றும், “பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, டெல்லி அரசும், பட்டாசு விற்பனைக்கான தடையை அறிவித்தது. இதன் வழி, டெல்லியின் காற்று மாசு நிலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு குறைந்துள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!