India
ஒரு வாரத்தில் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ரூ.3 கோடி இழப்பு!
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜெய்பூர் விமானநிலைய போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் விமானம், விமான நிலையம் வந்தவுடனே பணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எந்த பொரும் இல்லை.பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.
இதேபோல் டெல்லியில் இருந்து லண்டணுக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விந்துள்ளது. இந்த விமானத்தைல் சோதனைக்கு பிறகும் இதுவும் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டில் விடுத்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரு விமானத்துக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!