India
ஒரு வாரத்தில் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ரூ.3 கோடி இழப்பு!
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜெய்பூர் விமானநிலைய போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் விமானம், விமான நிலையம் வந்தவுடனே பணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எந்த பொரும் இல்லை.பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.
இதேபோல் டெல்லியில் இருந்து லண்டணுக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விந்துள்ளது. இந்த விமானத்தைல் சோதனைக்கு பிறகும் இதுவும் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டில் விடுத்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரு விமானத்துக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!
-
பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!
-
“மாம்பழ விவசாயிகள் நலனை உறுதி செய்ய வேண்டும்!” : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : இந்து மகா சபை அமைப்பின் தலைவர் கைது!