India
”உண்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” : ஹரியானா தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்ன?
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சி.பி.எம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
அதேபோல் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க யாருடனும் கூட்டணி வைக்காமல் 62 தொகுதிகளில் மட்டுமே தனித்து போட்டியிட்டது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி. இது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கும், ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி ஆகும். சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஹரியானா தேர்தல் முடிவு குறித்து, ஹரியானா மக்களின் ஆதரவுக்கு நன்றி, இந்த தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கவனித்து ஆய்வு செய்து வருகிறது. பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். நீதிக்காவும், உண்மைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !
-
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !