India
செபி தலைவர் மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு!: பதில் அளிக்காமல் அலட்சியமாக இருக்கிறாரா மாதவி புச்?
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), இந்தியாவின் பெரும் முதலாளியான அதானி மீது பல மோசடி குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
அதற்கான சான்றுகளையும், பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. எனினும், அதற்கு பெருமளவில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, அதானி மோசடிகளை விசாரிக்கும் உரிமையை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) வழங்கியது.
இந்நிலையில், SEBI-ன் தலைவரும், அதானி மோசடியில் பங்கு கொண்டவர் தான் என்ற மற்றொரு குற்றச்சாட்டை அண்மையில் வெளியிட்டது ஹிண்டர்பர்க் நிறுவனம். ஆனால், அதற்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு செவி சாய்க்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, தற்போது SEBI தலைவர் மாதவி புச் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். அது குறித்து ஹிண்டர்பர்க் வெளியிட்ட பதிவில்,
“செபி தலைவர் மாதவி புச் 99% பங்குகள் கொண்ட தனியார் ஆலோசனை நிறுவனம், பல நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளது.
செபி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிடம் இருந்தும், செபி தலைவரின் தனியார் ஆலோசனை நிறுவனம் நிதி பெற்றுள்ளது.
மகேந்திரா & மகேந்திரா, ICICI நிறுவனங்களிடம் இருந்தும், மாதவி புச் நிறுவனத்திற்கு நிதி அனுப்பப்பட்டுள்ளது.
மாதவி புச்-க்கு எதிராக பல மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தும், அதற்கு அவர் பதல் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்” என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, SEBI தலைவர் மீதும், அதற்கு பின்னணியில் இருக்கிற அதானி மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!