India
9 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சரிவு : பெட்ரோல் விலையை குறைக்காமல் மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தே வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60க்கு கீழ் இழந்தது. ஆனால் பா.ஜ.க வந்த பிறகு பெட்ரோல் விலை ரூ.100 கடந்தது.
கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் விண்ணை தொடும் அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எல்லாம் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பெட்ரோல் விலை ரூ.2 ஒன்றிய அரசு குறைத்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமரா பதவியேற்ற பிறகு கூட பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக விலை குறைந்து வந்தாலும் ஒன்றிய பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பொதுமக்களை வஞ்சித்து வருகிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது எல்லாம் பா.ஜ.கவினர் சொல்வது ஒன்றுதான். கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்று கூறுவார்கள். இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை ஏன் எங்கள் மோடி குறைக்காமல் இருக்கிறார் என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!