India
சிறையில் சொகுசு வாழ்க்கை : நடிகர் தர்ஷன் குறித்து இணையத்தில் வெளிவந்த வீடியோவால் பரபரப்பு!
பிரபல கன்னட நடிகர் தர்ஷன். அவரது தோழி பவித்ரா இவரை ரேணுகா சாமி என்ற ரசிகர் சமூகவலைதளத்தில் விமர்சித்துள்ளார். இதையடுத்து ரேணுகா சாமியை நடிகர் தர்ஷன் கடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் அவரது தோழி பவித்ரா, தர்ஷனின் நண்பர்கள் உட்பட 17 பேர் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷன், கையில் சிகரெட் மற்றும் தேனீர் கோப்பையுடன் நண்பர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த வீடியோ, தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!