India
இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் சதி திட்டம் முறியடிப்பு : மல்லிகார்ஜூன கார்கே!
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் தனியார் துறையை சேர்ந்தவர்களும் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் Lateral Entry என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்நிலையில், இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும். பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் இருக்கும் வரை இடஒதுக்கீட்டைப் பறிக்க புதிய யுக்திகளைக் கையாளும். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லை.. மரப் பலகையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம்!’
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!