India
இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் சதி திட்டம் முறியடிப்பு : மல்லிகார்ஜூன கார்கே!
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் தனியார் துறையை சேர்ந்தவர்களும் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் Lateral Entry என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்நிலையில், இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.கவின் திட்டம் சமூக நீதிக்கான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும். பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் இருக்கும் வரை இடஒதுக்கீட்டைப் பறிக்க புதிய யுக்திகளைக் கையாளும். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?