India
அயோத்தி ராமர் கோயிலில் 4000 மின் விளக்குகள் திருட்டு : போலிஸ் விசாரணை!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் தங்களின் மத அரசியலுக்காக பா.ஜ.க ராமர் கோயிலை கட்டியுள்ளது. மேலும் முழுமையாக இக்கோயில் கட்டி முடிக்கப்படாமலே அவசர அவசரமாக நாடாளுமன்ற தேர்தல் லாபத்திற்காக திறக்கப்பட்டது.
அண்மையில் பெய்த மழையின்போது கூட ராமர் கோயிலில் மழைநீர் கொட்டியது. மேலும் இக்கோயில் நிர்வாகத்தின் மீது பல புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோயிலின் முகப்பில் அலங்காரங்களுக்காக வைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோயிலுக்கு செல்லும் வழிமுழுவதும் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 19 ஆம் தேதி வரை அனைத்து விளக்குகளும் இருந்துள்ளது. பின்னர் மே 9 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வு செய்தபோது சில விளக்குகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.இதுவரை 3800 மூங்கில் மின் விளக்குகளும், 36 LED விளக்குகளும் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !