India
”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மோடி அரசின் பழிவாங்கும் செயல்” : நாராயணசாமி எதிர்ப்பு!
சிறுபான்மையினர் உரிமைகளையும், இஸ்லாமியர்களின் மத உணர்வுகளையும், தகர்க்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவ்வரிசையில், புதிதாக இணைக்கப்பட்டிருப்பது தான், வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவதற்கு முன்பே, அதன் சில வரையறைகள் பொதுவெளியில் கசிந்தன.
இந்நிலையில், அவ்வரையறைகளில் இடம்பெற்றிருக்கிற திருத்தங்கள், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையும், மத உரிமையையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ”இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புகளை அடுத்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. ஒரு மதத்தின் செயல்பாடுகளில் மற்ற மதத்தினர் தலையிட கூடாது. இவ்விவகாரத்தில் மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குகிறது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!