India
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு : 5 ஆண்டுகளில் உச்சம் தொட்ட தாக்குதல்கள்!
பா.ஜ.க அரசு, தனது பல நாள் நோக்கமான, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை நீக்க நடவடிக்கையை, 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த போது நிறைவேற்றியது.
அப்போதே, ஜம்மு - காஷ்மீரின் மாநில அரசு அதிகாரமும் நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களும், தேசிய பாதுகாப்பில் அலட்சியமும் தலைதூக்கியது.
அவ்வகையில், கடந்த 32 மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், தங்களின் உயிர்களை துறக்கும் நிலையும் ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு கலவர நிகழ்வுகளுக்கு இடையில், இன்று (05.08.24) நிறைவு செய்தது, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கம்.
இந்நிலையில், சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவுற்ற நாளான இன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கப்பட்டதற்கு பிறகு, அப்பகுதியில் சுமார் 683 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. எனவே, ஜம்மு - காஷ்மீரில் உடனடியாக தேர்தலை நடத்தி அதிகாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
எனினும், தேர்தல் குறித்த விரிவான விளக்கத்தை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!