India
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு : 5 ஆண்டுகளில் உச்சம் தொட்ட தாக்குதல்கள்!
பா.ஜ.க அரசு, தனது பல நாள் நோக்கமான, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை நீக்க நடவடிக்கையை, 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த போது நிறைவேற்றியது.
அப்போதே, ஜம்மு - காஷ்மீரின் மாநில அரசு அதிகாரமும் நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிரவாத தாக்குதல்களும், தேசிய பாதுகாப்பில் அலட்சியமும் தலைதூக்கியது.
அவ்வகையில், கடந்த 32 மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், தங்களின் உயிர்களை துறக்கும் நிலையும் ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு கலவர நிகழ்வுகளுக்கு இடையில், இன்று (05.08.24) நிறைவு செய்தது, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கம்.
இந்நிலையில், சிறப்பு நிலை நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவுற்ற நாளான இன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கப்பட்டதற்கு பிறகு, அப்பகுதியில் சுமார் 683 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. எனவே, ஜம்மு - காஷ்மீரில் உடனடியாக தேர்தலை நடத்தி அதிகாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
எனினும், தேர்தல் குறித்த விரிவான விளக்கத்தை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
Also Read
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!