India
”ஒன்றிய அமைச்சருக்கு நீட் தேர்வின் பிரச்சனை இன்னும் புரியவில்லை” : ராகுல் காந்தி பேச்சு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் நீட் வினாத்தாள் கசிவு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”நாடுமுழுவதும் ஒன்றிய அரசின் தேர்வு முறை கேள்விக்குறியாகிவிட்டது. பணக்கார மாணவர்களுக்காக மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பணம் இருந்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர். அமைச்சருக்கு அடிப்படை பிரச்சினை புரியவில்லை. இந்திய தேர்வு, முறைகேடுதான் என்பதை மாணவர்கள் புரிந்திருக்கின்றனர். பணம் இருந்தால், இந்தியத் தேர்வுகளை விலைக்கு வாங்கி விட முடியுமென அவர்கள் நம்புகிறார்கள். அமைப்பு சார்ந்த பிரச்சினையான இதற்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் தி.மு.க MP கலாநிதி வீராச்சாமி,” நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.நாடாளுமன்றத்தில் நீட தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கூட்டத் தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!