India
உயிருடன் புதைக்கப்பட்ட 2 பெண்கள் : பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் கொடூரம்!
மத்திய பிரதேச மாநிலம் ஹினோடா ஜோரோட் கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே. இவர்கள் குத்தகைத்து நிலம் எடுத்துள்ளனர். இந்த நிலத்தில் சிலர் சாலை அமைக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கு இவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, அவர்கள் மீது லாரியில் இருந்த மணலை கொட்டி உயிருடன் புதைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
”பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இதுதான் நிலைமை. பெண்களின் பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேச வெட்கப்பட வேண்டும்” என சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!