India
உயிருடன் புதைக்கப்பட்ட 2 பெண்கள் : பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் கொடூரம்!
மத்திய பிரதேச மாநிலம் ஹினோடா ஜோரோட் கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே. இவர்கள் குத்தகைத்து நிலம் எடுத்துள்ளனர். இந்த நிலத்தில் சிலர் சாலை அமைக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கு இவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, அவர்கள் மீது லாரியில் இருந்த மணலை கொட்டி உயிருடன் புதைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
”பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இதுதான் நிலைமை. பெண்களின் பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேச வெட்கப்பட வேண்டும்” என சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!