India
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 46 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பா.ஜ.கவின் இந்துத்வா கொள்ளை வீட்டையே தீ வைத்து கொளித்து விடும் என உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள உத்தவ் தாக்கரே, "பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக மகாராஷ்டிரா வந்த போது எங்களை போலி சிவசேனா என கேலி செய்துள்ளார். உண்மையில் எந்த சிவசேனா போலியானது என்பதை மக்களை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரே, நெருக்கடியான நேரத்தில் மோடியின் பின்னால் உறுதியாக நின்றார். அப்போது அதே சிவசேனாவை போலி என்று கூறுகிறார் மோடி. இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் போலி என்று சொல்ல தயங்கமாட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தற்போதைய பா.ஜ.கவின் கொள்கை பிடிக்குமா?
வீட்டில் அடுப்பை எரிய வைக்க உதவி செய்வதுதான் எங்களின் இந்துத்வா கொள்கை. வீட்டையே தீவைத்து கொளுத்துவதுதான் பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை. பிரதமர் மோடி பால்தாக்ரேவின் இந்துத்வா கொள்கைகளை பின்பற்றவில்லை" என கூறியுள்ளார்.
Also Read
-
அடுத்தடுத்து ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள்... இடைத்தேர்தல் நடத்த தடை விதித்த நீதிமன்றம் - விவரம்!
-
‘முதலமைச்சர் விஜயின் பேச்சை ஒளிபரப்பி அராஜகம்.. பள்ளி அறிவை வளர்க்க.. அரசியல் புகழ்பாட அல்ல’: DMK IT Wing
-
கரூர் துயரம் : “இன்னும் திருத்தல...” - இறப்பில் இன்றளவும் மலிவு அரசியல் செய்யும் விஜய்!
-
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!