India
”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது” : களநிலவரத்தை எடுத்து சொல்லும் பரகல பிரபாகர்!
10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை ஒன்றிய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது என பிரகலா பிரபாகர் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள பொருளாதார நிபுணர் பிரகலா பிரபாகர், ”மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பொருளாதார முறைகேடு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.
விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க இழந்துவிட்டது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. வட இந்தியாவில் 80 -95 இடங்களை பா.ஜ.க பறிகொடுக்கும். மகாராஷ்டிரா, பீகாரில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது.” என தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிபுணர் பிரகலா பிரபாகர் இந்த கருத்து நாடுமுழுவதும் இந்தியா கூட்டணியின் அலை வீசுகிறது என்பதை உறுதி செய்துள்ளது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!