India
”மோடி தோற்காவிட்டால் நாடு கருப்பு நாட்களை பார்க்கும்” : உத்தவ் தாக்ரே எச்சரிக்கை!
ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். அனைத்து தூசி மற்றும் அழுக்கை உறிஞ்சும் ஒரு வேக்யூம் கிளீனரை போல பா.ஜ.க கட்சி அனைத்து ஊழல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்த்துக்கொள்கிறது என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, சாம்னா நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், "மகாபாரதத்தில் திரௌபதியின் ஆடையை கழற்றியதுபோல நாட்டின் ஜனநாயகம் கழற்றப்படுகிறது.
சிவசேனாவின் தேர்தல் சின்னம் ஏக்நாத் ஹிண்டே தலைமைக்கு வழங்கப்பட்டத்தில் முன்னாள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஹிண்டே அணிக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு பலமுறை நினைவூட்டப்பட்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றம் இன்னும் சின்னம் குறித்துத் தீர்ப்பு வழங்காத நிலையில் எங்களைப் பிரதமர் மோடி விமர்சிக்கிறார். தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை 2019ல் மறந்துவிட்டார். பிறகு 2019ல் அளித்த வாக்குறுதிகளை இப்போது மறந்துவிட்டார். ஒலு சிலரை சில நேரம் முட்டாளாக்க முடியும். ஆனால் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது.
இந்த மக்களவை தேர்தலில் மக்கள் தங்கள் தலைவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். மோடி அரசு தோற்றால்தான் நாட்டின் எதிர்காலம் செழிப்பாக இருக்கும். நாடு அமைதியாக இருக்கும். ஒரு வேலை மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்றுவிட்டால் நாடு கருப்பு நாட்களைக் காணும்.
ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். அனைத்து தூசி மற்றும் அழுக்கை உறிஞ்சும் ஒரு வேக்யூம் கிளீனரை போல பா.ஜ.க கட்சி அனைத்து ஊழல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்த்துக்கொள்கிறது. தேர்தலில் தங்களது சாதனைகளைக் கூற எதுவும் இல்லாததால் பிரச்சாரத்தில் ராமரை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?
-
முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!