India
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள், தலித்துகளுக்காக இட ஒதுக்கீடு உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்து, இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல. ஆதிவாசிகள், தலித்துகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் குரல் என கூறினார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, " இட ஒதுக்கீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளும் அரசியலமைப்பு சட்டத்தால் மட்டுமே வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அனைவருக்கும் முக்கியமானது.
அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய மோடி விரும்புகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றாகத் தேர்தலில் போட்டியிடுகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !
-
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?
-
ரம்மியை ஆதரித்த ஆர்.என்.ரவி இப்போது எங்கே போனார்? : முரசொலி சரமாரி கேள்வி!
-
"Likes கெத்து இல்லை! Marks, Degrees- தான் உண்மையான கெத்து" - மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை !
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!