India
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள், தலித்துகளுக்காக இட ஒதுக்கீடு உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்து, இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல. ஆதிவாசிகள், தலித்துகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் குரல் என கூறினார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, " இட ஒதுக்கீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளும் அரசியலமைப்பு சட்டத்தால் மட்டுமே வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அனைவருக்கும் முக்கியமானது.
அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய மோடி விரும்புகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றாகத் தேர்தலில் போட்டியிடுகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!