India
”மோடி பா.ஜ.கவின் பிரதமர்; இந்தியாவின் பிரதமர் அல்ல" : சரத்பவார் தாக்கு!
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி வேட்பாளர் சந்திரகாந்த கைரேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதேபோல் ஜல்னா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய சரத்பவார், " நான் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடியின் பேச்சை கேட்டபோது அவர் நாட்டின் பிரதமர் அல்ல பா.ஜ.கவின் பிரதமர் என்பத தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்?. ஆனால் இவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், ராகுல் காந்தியையும், என்னையும் விமர்சித்து வருகிறார்கள்.
ஜவஹர்லால் நேரு தனது வாழ்நாளில் 10 வருடங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறையிலிருந்துள்ளார். அவர் அறிவியலை ஊக்குவித்தார். ஆனால் பா.ஜ.கவினர் செய்தது என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!