India
அரசின் திட்டங்களை வேண்டும் என்றே தவிர்த்த ஆளுநர்: ஒரு நிமிடத்தில் உரையை முடித்து கொண்ட ஆரிப் முகமது கான்!
இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் ஆரிப் முகமது கான் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்குத் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அம்மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டமன்ற மரபுப்படி ஆளுநர்தான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து உரையாற்றுவது வழக்கம். அதன் படி இன்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டமன்ற கூட்டத் தொடரை தொங்கி வைப்பதற்காக அவைக்கு வந்தார்.
அப்போது அவர் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, கேரள அரசு கொடுத்த 64 பக்கத்தில் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு தனது உரையை ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டார். ஆளுநரின் இந்த செயல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாநில அரசின் கொள்கை திட்டங்கள் மற்றும் மாநில அரசைப் பாராட்டி இடம் பெற்று இருந்ததால் வேண்டும் என்றே இவற்றை வாசிக்காமல் தனது உரையை முடித்துக் கொண்டுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!