India
பெற்ற தாயை மின்சார கம்பத்தில் கட்டி வைத்த கொடூர மகன் : ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஒடிசா மாநிலம், சரசபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா. 70 வயது மூதாட்டியான இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் சாரதா தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார்.
இதையடுத்து மூத்த மகன் கருணாவும் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் சாரதா தனது இளைய மகன் சத்துருக்கன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தாய் சாரதா சமைப்பதற்காக காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தாய் என்றும் பாராமல் அவரை அடித்து அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி துவைத்துள்ளார்.
இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவியையும் சஸ்துருகன் அடித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!