India
தீபாவளியன்று கடத்தப்பட்ட பள்ளி மாணவன்.. சிறுநீர் கழித்து துன்புறுத்திய கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது மீரட். இங்கு அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அந்த பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் தீபாவளி அன்று இரவு நேரத்தில், தனது வீட்டில் செய்யப்பட்ட பலகாரத்தை தனது உறவினர் வீட்டுக்கு ஒரு பாத்திரத்தில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இரவு நேரத்தில் இந்த மாணவர் மட்டும் தனியாக சென்றுள்ளார்.
இதனை கண்ட ஒரு கும்பல், மாணவரை பின்னிருந்து தாக்கி கடத்தியுள்ளது. பின்னர் மாணவரை ஒரு காட்டு பகுதி ஒன்றுக்கு கூட்டி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து தங்கள் கால்களால் அவரது உடலில் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் இருந்த இளைஞர் ஒருவர், அந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த கொடூரம் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சிறுவன் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு வலுத்த கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து அந்த வீடியோ குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 3 பேவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!