India
பிறந்த நாளுக்கு துபாய் அழைத்து செல்லாத ஆத்திரம்: கணவன் மூக்கில் குத்திய மனைவி - அடுத்து நடந்த அதிர்ச்சி!
புனேவின் வானவ்டி பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் கட்டுமானத் துறையில் தொழிலதிபர். இவரது மனைவி ரேணுகா. இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் மனைவி தனது பிறந்த நாளை கொண்டாடத் துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கணவர் நிகில் கண்ணா மறுத்துள்ளார். மேலும் அவரது பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த எந்த பரிசு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால் கணவன் மீது ரேணுகா கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இது குறித்து கணவனிடம் கேட்டுச் சண்டைபோட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் கணவன் மூக்கில் ஓங்கிக் குத்தியுள்ளார்.
இதில், கணவனின் மூக்கு உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனைவி ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!