India
உலகக் கோப்பை இறுதிப்போட்டி - TV-யை ஆப் செய்த மகன் : தந்தை செய்த கொடூரச் செயல் - உ.பியில் பகீர்!
இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டுமொத்த நாடே பார்த்துக் கொண்டிருந்தபோது உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியை டிவி-யில் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது மகன், தந்தையிடம் இரவு உணவைச் சமைத்துவிட்டு பின்னர் கிரிக்கெட் பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் கணேஷ் தொடர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனால் கோவமடைந்த மகன் டி.வியை ஆப் செய்துள்ளார். இதில் தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை கணேஷ் வீட்டிலிருந்த செல்போன் சார்ஜ் வயரை எடுத்து மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தந்தை கணேஷை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!