India
விளையாட அழைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. ஆசையாக சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !
மத்திய பிரதேச மாநிலம் ஹனுமங்கஞ்ச் என்ற நகரில் 6 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இந்த குடும்பத்துடன், அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர் செளகத் கான் (52) என்பவர் நன்றாக பேசியுள்ளார். மேலும் சிறுமியிடம் விளையாடியும் வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அந்த நபரை பிடித்து போயுள்ளது.
எனவே சிறுமியுடன் செளகத் கான் அடிக்கடி விளையாடி வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இங்கு வந்த அந்த நபர், சிறுமியிடம் தனது வீட்டுக்கு விளையாட அழைத்துள்ளார். மேலும் தனது வீட்டில் நிறைய பொம்மைகள், வீடியோ கேம் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறுமியும் விளையாடுவதற்காக ஆசையாக சென்றுள்ளார். அப்போது செளகத் கான், அந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமையும் செய்துள்ளார். இதனால் பயந்த அந்த சிறுமியிடம் வெளியில் சொல்லக்கூடாது என்று கண்டிப்பாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி, இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.அதோடு வயிறு வலி என்று சிறுமி அழுதுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் கூட்டி சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் பொறுமையாக கேட்டுள்ளனர்.
அப்போது பக்கத்து வீட்டு மாமாதான் இதனை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து செளகத் கான் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட செளகத் கானை அதிரடியாகி கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!