India
பாஜக ஆட்சியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்.. ம.பியில் சட்ட விரோதமாக நடந்து வந்த ஆயுதக் கிடங்கு!
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதக் கிடங்கு செயல்பட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தார் பகுதி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, 36 லட்சம் மதிப்பில் 150க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு இருந்த மூன்று பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆயுதக்கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஆயுதக்கிடங்கு நடத்தி வந்த கும்பலுக்கு ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் இம்மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க துப்பாக்கி கலாசாரத்தை உருவாக்கப்பாக்கிறதா? என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதாவது சதி வேலைகளுக்காக இந்த ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்ததா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்