India
பாஜக ஆட்சியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்.. ம.பியில் சட்ட விரோதமாக நடந்து வந்த ஆயுதக் கிடங்கு!
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதக் கிடங்கு செயல்பட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தார் பகுதி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது, 36 லட்சம் மதிப்பில் 150க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு இருந்த மூன்று பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆயுதக்கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஆயுதக்கிடங்கு நடத்தி வந்த கும்பலுக்கு ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் இம்மாநிலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க துப்பாக்கி கலாசாரத்தை உருவாக்கப்பாக்கிறதா? என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதாவது சதி வேலைகளுக்காக இந்த ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்ததா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!