India
காணாமல் போன கோடி மதிப்புள்ள வைரக்கல்.. வைர வியாபாரியால் தேடி திரிந்த மக்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் !
பொதுவாகவே தங்கம், வைரம் என விலையுயர்ந்த பொருட்கள் மக்கள் மத்தியில் இன்றளவும் பெரிய பொக்கிஷம் போல் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவரது கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர கற்கள் கீழே விழுந்ததாக பரவிய செய்தியை அடுத்து மக்கள் அதனை தேடி திரிந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் என்ற நகரம் இந்தியாவின் வைரத்தின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரச்சா (Varachha) என்ற பகுதியில் வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் இருந்த மினுமினு கற்களை கீழே தவறவிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதனை தேடியுள்ளனர். அவ்வாறு தேடும்போது, அருகில் இருந்த மற்ற சிலர் என்ன என்று கேட்டுள்ளனர். அப்போது வைர வியாபாரியின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைரக் கற்கள் கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தெருவில் வருகிறவர்கள், போகிறவர்கள் என பலரும் அந்த கற்களை தேடியுள்ளனர். தீவிர்மாக தேடியும் வைரக் கற்கள் கிடைக்கவில்லை. இதையடுத்தே அவர்களுக்கு தெரியவந்துள்ளது, மக்கள் தேடி அலைந்தது வைரக்கற்கள் அல்ல என்று. அதாவது அந்த கற்கள் சேலை மற்றும் கவரிங் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க வைரம் எனப்படும் விலைக்குறைந்த கற்கள் என்று தெரியவந்தது.
இந்த சம்பவம் பெரும் வைரக்கற்களை தேடி அலைந்த மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் பல வித கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!