India
ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவன்.. தனி அறையில் வைத்து அடித்து கொடுமை படுத்திய ஆசிரியர்கள்!
வடகிழக்கு டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுபம் ராவத் என்ற மாணவர் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்த போது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துள்ளார்.
இதை கவனித்த ஆசிரியர் சுபம் ராவத்தை அருகே அழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். அப்போது அவர் அழுது கொண்டே ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் சுபம் ராவ்த்தை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மேலும் மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு மாணவனை மீண்டும் அடித்துள்ளனர். பிறகு சுபம் ராவத் பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது உடலிலிருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் என்ன நடந்தது என் விசாரித்துள்ளனர்.
பின்னர் மாணவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் அந்த நான்கு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!