India
அமர்ந்து படிக்க இருக்கை கூட இல்லை.. கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் படிக்க இருக்கை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பள்ளி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து கல்வித்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஆவேசத்துடன் இருந்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மறித்துத் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையிலிருந்து கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர். பின்னர் போலிஸார் மாணவிகளைச் சமாதானப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!