India
அமர்ந்து படிக்க இருக்கை கூட இல்லை.. கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் படிக்க இருக்கை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பள்ளி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து கல்வித்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஆவேசத்துடன் இருந்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மறித்துத் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையிலிருந்து கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர். பின்னர் போலிஸார் மாணவிகளைச் சமாதானப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!