India
சூட்கேஸில் 55 மலைப் பாம்புகள்.. 17 ராஜநாகம்.. 6 குரங்குகள் : பரபரப்பான பெங்களூரு விமான நிலையம்!
கர்நாடக மாநிலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 55 மலைப்பாம்புகள் உட்பட 72 பாம்புகளைக் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் எடுத்து வந்த பெரிய சூட்கேஸில் ஏதோ நெளிந்து கொண்டே இருந்துள்ளது. இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த பயணியை அழைத்துச் சென்று அவரது உடமைகளைச் சோதனை செய்தனர்.
அதில், 55 மலைப்பாம்பு குட்டிகள், 17 ராஜநாக பாம்பு குட்டிகள், 6 கேப்புச்சீன் வகை குரங்குகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் 6 குரங்கு குட்டிகளும் இறந்த நிலையிலிருந்தன. எதற்காகக் கொடிய விஷமுள்ள இந்த பாம்புகள் இந்தியாவுக்குக் கடத்தி வரப்பட்டது என்றும், இறந்த குரங்கு குட்டிகள் எதற்காகக் கொண்டு வரப்பட்டது என்றும் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
-
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!