India
BREAK UP செய்ததால் ஆத்திரம்: முன்னாள் காதலியை பழிவாங்க காதலன் செய்த கொடூர செயல்.. அதிர்ச்சியில் பெங்களூரு
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடன ஆசிரியராக ஆண்டி ஜார்ஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் கல்லூரி மாணவி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாகி காதலிக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை புகைப்படமாக ஆண்டி ஜார்ஜ் எடுத்து வைத்துள்ளார். இதனிடையே அந்த கல்லூரி மாணவி, கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டி ஜார்ஜுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆண்டி ஜார்ஜ் கடும் கோவத்தில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியை பழிவாங்க எண்ணி தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்த அந்த மாணவி அந்த புகைப்படங்களை அழித்து விடுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து தனது நண்பர்களான சந்தோஷ் மற்றும் சசி ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த புகைபடத்தை காட்டி, மூவரும் அந்த பெண்ணை கடந்த ஆறு மாதமாக தொடர்ந்த பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த கொடுமை தாங்க முடியாத அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், ஆண்டி ஜார்ஜ் மற்றும் அவரின் நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சசி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!