India
இளைஞர் கையில் துண்டாக வெட்டப்பட்ட 'தலை'.. கதறியடித்து ஓடிய மக்கள்: உ.பியில் நடந்த பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிபா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு ஆசிபா வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து காதலர்கள் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் இது குறித்து ஆசிபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிபாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் தொடர்பாக ஆசிபாவிற்கும் அவரது சகோதரர் ரியாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரது தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையைக் கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இவர் சாலையில் தலையுடன் நடந்து சென்றதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?