India
இளைஞர் கையில் துண்டாக வெட்டப்பட்ட 'தலை'.. கதறியடித்து ஓடிய மக்கள்: உ.பியில் நடந்த பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிபா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு ஆசிபா வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து காதலர்கள் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் இது குறித்து ஆசிபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிபாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் தொடர்பாக ஆசிபாவிற்கும் அவரது சகோதரர் ரியாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரது தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையைக் கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இவர் சாலையில் தலையுடன் நடந்து சென்றதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!