India
இளைஞர் கையில் துண்டாக வெட்டப்பட்ட 'தலை'.. கதறியடித்து ஓடிய மக்கள்: உ.பியில் நடந்த பகீர் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிபா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு ஆசிபா வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து காதலர்கள் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் இது குறித்து ஆசிபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிபாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் தொடர்பாக ஆசிபாவிற்கும் அவரது சகோதரர் ரியாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் அவரது தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையைக் கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இவர் சாலையில் தலையுடன் நடந்து சென்றதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!