India
பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை.. நண்பர்களோடு சேர்ந்து காதலன் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் என்ற பகுதியைச் சேர்ந்த சுமேஷ் ( வயது 19) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பள்ளி சிறுமி ஒருவரும் காதலித்து வைத்துள்ளனர். சுமேஷ் சில நாட்களுக்கு முன்னர் தனது காதலியான அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துள்ளார்.
அந்த சிறுமியும் காதலன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக காதலன் அழைத்த அந்த இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சுமேஷ் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமேஷ் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு நிற்காமல் தனது நண்பர்களான சக்தி (18), அனூப் (22), அபிஜித் (20) மற்றும் அரவிந்த் (28) ஆகியோரை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அனைவரும் அங்கு வந்ததும், அவர்கள் அந்த சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து யாரிடமும் கூறவேண்டாம் என அந்த சிறுமியை மிரட்டி அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுமியும் யாடிடமும் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு கவுன்சலிங் நடத்தியபோது, அவர்களிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த சிறுமி கூற இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிக்கு ஆறுதல் கூறி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் காதலன் சுமேஷ் உள்ளிட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்
-
“நிர்வாகிகளின் உணர்வு என்ன? உண்மை என்ன? அது மட்டும்தான் எனக்குத் தேவை!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
“காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க பிரமுகர்” : வழக்குப் பதிவு செய்தாத காவல்துறை!
-
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் த.வெ.க அமைச்சர் : ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார்!