India
’என் தந்தையை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 12 வயது மகன்: என்ன காரணம்?
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜெப்ரா கிராமத்தில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையத்திற்கு 12 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த போலிஸார் சிறுவனிடம் காவல்நிலையத்திற்கு வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.
இதற்கு அந்த சிறுவன், "நான் எனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன்" என கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட போலிஸார் சிறுவனிடம் மேலும் விசாரணை செய்தனர். அப்போது, "எனது தந்தையின் பெயர் ஹரியோம். இவர் தினமும் குடித்துவிட்டு தனது தாயை பெல்ட் மற்றும் இரும்பு பைப்பால் அடித்து கொடுமைப் படுத்துகிறார்.
இதனால் அவரை கைது செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். உடனே போலிஸார் சிறுவன் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த சிறுவனின் தந்தை ஹரியோவை கைதுசெய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் மனைவியை இனி அடிக்கமாட்டேன் என கூறியதை அடுத்து போலிஸார் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்துக் கூறிய போலிஸார், "இதுபோன்ற சம்பவங்கள் குறித்து குழந்தைகள் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பது அரிது. சிறுவனின் தைரியத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!