India
’என் தந்தையை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 12 வயது மகன்: என்ன காரணம்?
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜெப்ரா கிராமத்தில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையத்திற்கு 12 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த போலிஸார் சிறுவனிடம் காவல்நிலையத்திற்கு வந்த காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.
இதற்கு அந்த சிறுவன், "நான் எனது தந்தை மீது புகார் கொடுக்க வந்துள்ளேன்" என கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட போலிஸார் சிறுவனிடம் மேலும் விசாரணை செய்தனர். அப்போது, "எனது தந்தையின் பெயர் ஹரியோம். இவர் தினமும் குடித்துவிட்டு தனது தாயை பெல்ட் மற்றும் இரும்பு பைப்பால் அடித்து கொடுமைப் படுத்துகிறார்.
இதனால் அவரை கைது செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். உடனே போலிஸார் சிறுவன் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த சிறுவனின் தந்தை ஹரியோவை கைதுசெய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் மனைவியை இனி அடிக்கமாட்டேன் என கூறியதை அடுத்து போலிஸார் அவரை விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்துக் கூறிய போலிஸார், "இதுபோன்ற சம்பவங்கள் குறித்து குழந்தைகள் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பது அரிது. சிறுவனின் தைரியத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!